இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/22/2012

மருதமுனையில் 13 அடி நீளமான முதலை பிடிப்பு

கல்முனை, மருதமுனை பிரதேச கடற்கரையில் இன்று 13 நீளமான முதலை ஒன்று பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக கடலிலிருந்த குறித்த முதலை இன்று கரைக்கு வந்தபோது மக்கள் வலைவீசிப் பிடித்துள்ளனர். பிடிபட்டு சில மணி நேரங்களில் இந்த முதலை உயிரிழந்துள்ளது.

இது குறித்து பிரதேசவாசிகள் குறிப்பிடுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் அள்ளுண்டு ஆற்றிலிருந்து கடலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் வந்தது இந்த முதலை. இன்று சற்றே மயக்க நிலையில் கரைக்கு வந்தபோது பிரதேசவாசிகளின் முயற்சியினால் வலை வீசி பிடிக்கப்பட்டது. பிடிபட்டு சில மணி நேரங்களில் உயிரழந்துவிட்டது என தெரிவித்தனர்.
(VI)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா