BBC:பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு
தடுத்துவைக்கப்பட்டுள்ள அசாத் சாலி உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக
அரசாங்கம் கூறுவதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் துணை மேயருமான அசாத் சாலி, கடந்த
வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டது முதல் உண்ணாநோன்பு போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தார்.மருத்துவமனையில் உள்ள அவர், நேற்று
மாலைமுதல் உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக இலங்கை பாதுகாப்பு
விவகாரங்களுக்காக பேசவல்ல அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்ல இன்று திங்கட்கிழமை
ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அசாத் சாலியின் உடல்நிலை இன்றும்
மோசமடைந்துள்ளதாகவும் அவர் இன்னும் உண்ணாநோன்பைக் கைவிடவில்லை என்றும்
அவரது மகள் அமீனா சாலி பிபிசியிடம் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment