(ஹனீபா)
வட்டமடு மேய்ச்சல் தரைக்குள் உட்பிரவேசிக்க உடனடித் தடை என்ற தலைப்பில் வட்டமடு வயல் பிரதேசம் கால்நடை மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால் அந் நிலப்பிரதேசத்திற்குள் யாரும் உட்புகுவதற்கோ, எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கோ உடனடியாகத் தடைவிதிப்பதாக அம்பாரை அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் தெரிவித்தாக கடந்த 28.09.2013 சனிக்கிழமை தமிழ்; பத்திரிகை ஒன்றின் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகின.
இது சம்பந்தமாக அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் நேற்று முந்தினம் 02.10.2013 புதன்கிழமை ஓய்வு பெற்ற காணி அதிகாரியும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளருமான ஏ.பி.தாவூத் அவர்களின் தலைமையில்; வட்டமடு விவசாயக் குழு, கிறீன்பீல்ட், முறாணவட்டி, தோணிக்கல் தெற்கு, கொக்குளாவ, வட்டமடு புதிய கண்டம் ஆகிய கண்டங்களின் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்தித்து மேற்படி செய்தி சம்பந்தமாகக் கலந்துரையாடுவதைப் படத்தில் காணலாம்.
0 comments:
Post a Comment