பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புற நெகும வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை கல்லரச்சல் பகுதியில் நான்கு மில்லியன் ருபாய் செலவில் வடிகான்கள் மற்றும் கொங்ரீட் வீதி அமைக்கும் பனிகள் துரிதகதியில் இடம் பெற்று வருகின்றது.
இதே வேளை அப் பகுதியில் பல காலமாக புனரமைக்கப்படாத வீதிகளும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரிம் வேண்டுகோளுக்கினங்க துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சின் நிதியில் இருந்து கொங்ரீட் கல் வீதியாக புனரமைக்கப்பட்டு பொது மக்கள் பாவணைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதற்க்காக அப்பகுதிவாழ் மக்கள் ,சமூக சேவை அமைப்புக்ள் மற்றும் இளைஞ்ர் கழகங்கள் என்பன சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
0 comments:
Post a Comment