-ஹனீபா
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பட்டதாரிப் பணிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நோற்று (24) பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பீ.எச் பியசேன கலந்து கொண்டார்.
ஏணைய அதிதிகளாக அம்பாறை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.விவேகானந்தராஜா, உதவிப் பிரதேச செயலாளர் என்.சிவயோகநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான எஸ்.உதயகுமார், எம்.ஜௌபர், அதிபர்களான எம்.எம்.றியாஸ், எஸ்.மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தின் போது 57 பட்டதாரிகளுக்கு நிமனம் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment