(எம்.ரீ.எம்.பர்ஹான்)
நாட்டில் தற்சமயம் பெய்து வரும் அடை மழை காரணமாக வேகமாக டெங்கு நுளம்பு பரவி வருகின்றது. இதனை தடுக்கும் முகமாக சம்மாந்துற பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நொஷாட் அவர்களின் பணிப்புரையின் பெயரில் டெங்கை ஒழித்துக் கட்டுவோம் என்ற தொனிப்பொருளில் சம்மந்துறையில் விஷேட நிகழ்சி திட்டம் நேற்று (2013.12.04) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் சுமார் 10000 குடும்பங்களுக்கு டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனம் கண்டு, அறிக்கையிடும் அட்டைகளை மக்களுக்கு கை அழிப்பது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏஏ.சலீம்,உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment