இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/18/2013

தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை

(J.N)
தெஹி­வளை — கல்­கிசை மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட பிர­தே­சங்­களில் அமைந்­தி­ருக்கும் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்ள வேண்­டா­மென நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பொலி­ஸாரால் அறி­விக்­கப்­பட்­டதையடுத்து அங்கு வாழ் முஸ்­லிம்கள் மத்­தியில் சற்று பதற்­ற­மான சூழல் தென்­பட்­டது.

தொழு­கைகள் நடத்­தப்­படும் பட்­சத்தில் தேவை­யற்ற பிரச்­சி­னைகள் உரு­வா­க­லா­மென்ற அச்­சத்தின் கார­ணத்­தி­னா­லேயே அத்­தி­டிய மஸ்­ஜித்துல் ஹிபா, களு­போ­வில மஸ்­ஜித்துல் தாரூல் சாபீய், தெஹி­வளை தாரூல் அர்க்கம் ஆகிய மூன்று பள்­ளி­வா­சல்­க­ளிலும் தொழு­கை­களை நடத்த வேண்டா மென பொலிஸ் தரப்­பி­லி­ருந்து அறி­விக்­கப்­பட்­ட­தாக அமைச்சர் றிஷாட் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார்.

குறித்த பள்­ளி­வா­சல்கள் அமைந்­தி­ருக்கும் பிர­தே­சங்­களில் உள்ள சில பெளத்த மத குருமாரும்இ பெளத்­தர்­களும் இணைந்து மேற்­படி பள்­ளி­வா­சல்கள் மூன்றும் சட்­ட­வி­ரோ­த­மா­னவை என பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­டி­ருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இதே­வேளை, இவ்­வி­வ­காரம் தொடர்பில் இன்று புதன்­கி­ழமை சம்­பந்­தப்­பட்­டோ­ருடன் பேச்­சு­வார்த்­தை­யொன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் தேவைப்­படும் பட்­சத்தில் ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்பு செயலர் ஆகி­யோரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வர விருப்­ப­தா­கவும் அமை ச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள் ளார்.

பொலிஸார் மறுப்பு
இதே­வேளை, தெஹி­வளை பிர­தேச பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டா­மென பொலிஸா ரால் விடுக்­கப்­பட்­டுள்ள அறி­விப்­பினை மறுத்­துள்ள பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோகண, பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்ள வேண்­டா­மென கூறு­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு அதி­காரம் கிடை­யாது. அல்­லது தொழு­கை­களை தடை செவ­தற்­கான அதி­கா­ரமும் இல்லை என்று குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்,

எந்த பள்ளி­வா­ச­லிலும் பொலிஸார் தொழு­கையை தடை செய்­ய­வில்லை. தெஹி­வளை பிர­தே­சத்தில் அவ்­வாறு எந்த சம்­ப­வமும் இடம்­பெ­ற­வில்லை. எனினும் கொஹு­வல பிர­தே­சத்தில், குர் ஆன் மத்­ர­ஸா­வாக நடத்தி வரப்­பட்ட இடம் ஒன்று தற்­போது தொழு­கைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­வ­தாக பெளத்த பிக்கு ஒருவர் பொலிஸில் முறைப்­பாடு அளித்­துள்ளார். அந்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ரணை செ ய்ய பெளத்த, முஸ்லிம் தரப்புப் பிரதி நிதிகளை இன்று புத்தசான மற்றும் மதவிவகார அமைச்சுக்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனை தவிர எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸார் பள்ளி வாசலில் தொழுகைக்கு தடை விதிக் கவில்லை என தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா