இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/12/2014

சம்மாந்துறையில் புலமைப்பரிசில் மாணவர்களை வளப்படுத்துவதற்கு பெற்றாருடன் கலந்துரையாடல்

(ஏ.எம்.தாஹாநழீம்)
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களை வளப்படுத்தி, அம்பாறை மாவட்டத்திலே அதிகளவான மாணவர்களை சித்தியடை வைக்கும் இவ்வாண்டுக்கான முயற்சியை முன்னெடுக்கும் முகமாக புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் பெற்றார்களுடன் கலந்துறையாடல் ஒன்று சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் 09.01.2014 ஆந் திகதி காலை 09.00 மணியளவில் நடைபெற்றது. 

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சையில் இப்பாடசாலையில் 41 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் மாவட்டத்தில் முதலாம் மாணவனாகவும் ARMZ. ஹனீன் என்ற மாணவன் தெரிவு  செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வினை இப்பாடசாலையின் பிரதி அதிபர ஏ.எம். தாஹாநழீம் அவர்கள் ஏற்பாடுகளை செய்ததுடன் இப் இப்பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியையான மன்சூர் றகீமாவும் கலந்துகொண்டனர் 




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா