(Arivu)
குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியின் பிரதான மேடைகளில் ஒன்றில் ஏராளமானோர் வேடிக்கை பார்க்க பெண்கள் குஸ்தி போட்டார்கள்.
இவர்கள் சிங்கள பாரம்பரிய போர் உடையில் மேடையில் தோன்றினார்கள்.சிங்களவர்களின் பண்டைய, பாரம்பரிய போர் முறைகளில் ஒன்று அங்கம்.இப்பெண்கள் அங்கம் என்கிற யுத்த சாஸ்திரத்தில் மிகுந்த நிபுணத்துவம் பெற்று வருகின்றார்கள்.
அங்கம் என்கிற யுத்த சாஸ்திரம் அருகி வருகின்ற நிலையில் தேசத்தின் மகுடத்தில் இதை மக்களுக்கு காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இக்கண்காட்சியை ஊடகவியலாளர்கள் பார்வையிடுகின்றமைக்கான விசேட ஏற்பாடுகளை ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க செய்து கொடுத்து உள்ளார்.
0 comments:
Post a Comment