-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-
இன்று (2014-04-14) கல்முனை கிறீன் பீல்ட் புதிய நகரில் பொருளாதார அமைச்சின் கீழ் திவிநெகும வேலைத்திட்டத்தின் தொடரில் திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி, கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் கௌரவ அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் அவர்களும் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களும் சிறப்பு அதிதிகளாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்..எஸ்.நயீமா, சமுர்த்தி முகாமையாளர் எஸ்.சதீஸ் போன்றோருடன் விசேட அதிதிகளாக கல்முனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி A.W.M.கfப்பார்அவர்களும் சட்டத்தரணி லியாக்கத் அலி அவர்களும் கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பிரத்தியோக செயலாளர் எம்.ஏ.ஜின்னாஹ் அவர்களும் பங்குகொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment