பலாங்கொட அப்பர் தோட்டர் பகுதியில் பெண்ணொருவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிக் கொலை செய்த கணவரை பலாங்கொட பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அப்பர் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான வெள்ளசாமி பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.05 மணியளவில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment