இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/26/2012

விகாரையிலுள்ள அறையில் வைத்து சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பிக்குவுக்கு விளக்கமறியல்


சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்பட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. எனினும் சிறுமி க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்தமையினால் பெற்றோர் இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி தொடர்பாக முறைப்பாடொன்று உள்ளதாகக் கூறி விகாரைக்கு அழைத்துள்ள குறித்த பிக்கு அங்குள்ள அறையொன்றில் வைத்தே சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. (vi)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா