அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி ஆற்றில் மட்டக்களப்பு கன்னங்குட இலுப்படிச்சேனையை சோ;ந்த பா.உருத்திரன் வயது- 45 என்ற குடும்பத்தர் நேற்று (22) மாடுகளை மேய்பதற்காக சென்ற வேளையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் காப்பாற்ற முடியாமல் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சம்மாந்துறை பொலிசாருக்கும் இரானுவத்தினருக்கும் தெரியப்படுத்தியூள்ளனர்.
இன்றைய தினம் இவரை தேடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் இன்று (23) காலை 10 மணியளவில் அவர் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அதே ஆற்றுப் பகுதியிலிருந்த சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
இவர் மாவடிப்பள்ளியை சோ;ந்த ஒரு நபருடைய மாட்டுப் பட்டியை பராமரிக்கும் ஒரு கூலித்தொழிலாழியாக பணபுரிந்தவர்என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவருடைய உடல் பொலிஸாரின் விராரனைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன
0 comments:
Post a Comment