இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/29/2012

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை குறித்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை


சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை குறித்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் இனவாத பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை தொடர்பில் நீதி அமைச்சர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகளுக்கும் நீதி அமைச்சிற்கும் தொடர்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டக்கல்லூரி பரீட்சைகள் மற்றும் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகளுக்கு பிரதம நீதியரசர் தலைமையிலான குழுவொன்றே பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவிற்கு சில பிரதிநிதிகளை நீதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் பரிந்துரை செய்வதாகவும், இதன் நடவடிக்கையில் தலையீடு செய்வதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா