இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/11/2012

சர்வதேச அல்குர்ஆன் மனன போட்டியில் இலங்கை மாணவன் முதலாமிடம்


சவூதி அரேபியா மக்கா நகரில் 83 நாடுகள் பங்குபற்றிய சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் ரிப்தி முஹம்மத் ரிஸ்கான் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் மாணவர் ஆவார்.

சர்வதேச ரீதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்து இன்று 11-12-2012 (புதன்கிழமை) நாடு திரும்பும் மாணவன் ரிஸ்கானுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்படவுள்ளது.

விமான நிலையத்திலிருந்து கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசலை வந்தடையும் மாணவனை, கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா