இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/31/2012

பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் இராணுவ வீரர் கைது


கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வீட்டில் தனியாக இருந்த தாயொருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான பாதிக்கப்பட்ட பெண், வீட்டில் தனியாக இருந்த வேளை பக்கத்து வீட்டு 26 வயதான நபரால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நெளுவபகல ஹிங்கும்மட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் அந்த பெண்ணின் கணவர் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்தப் பெண் தனது கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாகவும் அவரை சென்று மாலை வேளையில் பார்த்து வரும்படியும் அதற்கான பணம் தருவதாகவும் பக்கத்து வீட்டு இளைஞனிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்நபர் வைத்தியசாலைக்குச் செல்லாது இரவுவேளையில் பிறிதொரு நபருடன் மது போதையில் அப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா