இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/15/2013

ஆறாம் வகுப்பு மாணவனை ஆசைக்கு பணியவைத்த 42 வயது பெண் கைது!


TCN : கேரளாவில், ஆறாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு மாணவனை, கத்தியை காட்டி மிரட்டி, ஆசைக்கு பணிய வைத்த, 42 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
கேரளா, எர்ணாகுளம் மாவட்டம், வடக்கே காட்டை சேர்ந்தவர் ஷாகிதா, 42. கணவரால் கைவிடப்பட்டவர். இவரின், மூன்று குழந்தைகளும் கணவருடன் வசிக்கின்றனர்.
தனியே வசித்து வந்த இவருக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ஆறாம் வகுப்பு படிக்கும் சுஜித், 12, (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வீட்டுப் பொருட்கள் வாங்கி தருவது உட்பட, பல உதவிகளை செய்து வந்தான்.
இந்நிலையில், கடந்த மாதம், 11ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, மளிகைப் பொருட்களை வாங்கி வந்த, சுஜித்தை, தன் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்ற ஷாகிதா, அவனுடன் உடல் உறவு கொள்ள முயற்சித்தார். பயந்த மாணவன் அங்கிருந்து ஓட முயன்றான்.
அதற்குள் ஷாகிதா, கத்தியை காட்டி, அவனை மிரட்டி, பலாத்காரம் செய்துள்ளார். வலியால் அவதிப்பட்ட மாணவன், இது குறித்து யாரிடமும் சொல்லாமல், தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளான்.
அதேநேரத்தில், பள்ளியில் தன் சக மாணவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளான். இவ்வாறு விஷயம் வெளியே தெரியவர, போலீசார் விசாரணை நடத்தினர். முடிவில், ஷாகிதாவை கைது செய்தனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா