இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/19/2013

சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வல்லுறவு செய்த நபர் கைது


VI :காதலிப்பதாகக் கூறி 15 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்த்துடன் தொடர்புடைய இன்னுமொருவரைக் கைதுசெய்துள்ளதுடன் மேலும் இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் தேடிவருகின்றனர்.

வேலனை பொலிஸ் பிரிவில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக கடந்த 14 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இம் முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைதுசெய்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையக மேலும் இரு சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா