இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/09/2013

கிராம அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வு

(ஹனீபா)
நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மத்தியஸ்தம் தொடர்பாக அம்பாரை மாவட்ட கிராம அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரை அறிவூட்டும் செயலமர்வு நேற்று (08) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உதுமாவெப்பை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது முரண்பாடுகள், மத்தியஸ்தம், பிணக்குகளை தீர்த்து வைத்தல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

கல்முனை தமிழ் பிரிவு, சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர்  கலந்து கொண்டனர்
இச்செயலமர்வில் வளவாளர்களாக நீதியமைச்சின் நிகழ்ச்சித் திட்டமிடல் உத்தியோகத்தர்களான வீ.சவரிநாயகம், பி.சனாதனசர்மா, லலித் ஹபுகஹபிடிய ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா