இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/27/2013

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை காணச் செல்லும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்-பொலிஸ்மா அதிபர்

அம்பாறையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை காண வரும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்துள்ளார். 

இன்று (27) விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை காணச் செல்லும் முஸ்லிம்களை ஒரு குழு அச்சுறுத்தி வருவதாகவும் அது குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

எனினும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இடம்பெறும் பூமியில் பொலிஸ் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதென பொலிஸ் மா அதிபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

எனவே அச்சமின்றி தேசத்திற்கு மகுடம் காண வருமாறு அவர் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். AD

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா