கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவில் கடற்கரை பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த அனுஸ்க இந்திரஜித் பெனாண்டோ என்ற ஊடகவியலாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
அனுஸ்க இந்திரஜித் பெனாண்டோவிற்கு வயது 27 ஆகும். இவர் கந்தான – ஹல்பேமாவத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.
விபத்தை அடுத்து முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment