இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/04/2013

அம்பாறையில் வாகன விபத்து பெண் ஒருவர் உயிரிழப்பு


(ஹனீபா)
இன்று (04) செவ்வாய்கிழமை அதிகாலை அம்பாறை கொனாகொல்லை என்ற இடத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அம்பாறை பொது வைத்திய சாலையில் அனுமதின்னப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் சாய்ந்தமருது -05ம் பிரிவைச் சேர்ந்த ஜெமீலா அனூன் காரியப்பர் வயது-65 என்பவராகும் இவருடைய ஜனாஸா அம்பாறை பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பம் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலே இன்று அதிகாலை 3.30 மணியளவில் அம்பாறை கொனாகொல்ல பிரதேச நெடுஞ்காலையிலுள்ள பள்ளம் ஒன்றில் வீழ்ந்த போதே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மரணித்த இவர் கல்முனைப் பட்டின சபையின் முதாலாவது தவிசாளராக பதவி வகித்த மாஹூம் இஸ்மாயில் காரியப்பரின் மூத்த புதல்வியும் முன்னாள் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் ஜெமீல் ஜெமீல் காரியப்பரின் மனைவியுமாவார் அத்துடன் கல்முனை மாநகர பிரதி முதல்வர் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமான சிரேஷ;ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் மாமியுமாவார்.

இவருடைய ஜனாஸா இன்று மாலை சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் மருமகன் எஸ்.எம்.அஜ்வத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா