இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/10/2013

குடும்பத்தலைவர்களை இழந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு


(ஹனீபா)
குடும்பத்தலைவர்களை இழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு வேல்ட் விஷன் நிறுவனத்தின் சுழற்சி முறை மாணிய கடன் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வீரமுனை விதவைகள் புனர்வாழ்வு நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் மாணிய கடன் வழங்கும் நிகழ்வு இன்று (10) மாலை வீரமுனை நியாப் பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவி எம்.சுசீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகரும் ஆலோசகருமான ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோத்தர் கே. பேன்னம்பலம் கலந்து கொண்டு காசேலைகளை வழங்கி வைத்தார்.

இவ்வைபவத்தின் போது சுயதொழில் முயற்சியாளர்களின்தொழில் முயற்சிக்கு ஏற்ப 61 குடும்பங்களுக்கு 1.78 மில்லியன் ரூபாய்கள் மாணிய கடனாக வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எஸ்.பொற்கொடி, பொருளாளர் ஏ.புஷ;பாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1994ம் ஆண்டு வேல்ட் விஷன் நிறுவனத்தின் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் வீரமுனை விதவைகள் புனர்வாழ்வு நலன்புரி ஒன்றியத்தின் சிறந்த செயற்பாட்டினாலும் நிர்வாகத்தினாலும் 19 வருட காலமாக விதவைக் குடும்பங்களின் வாழ்வாதரத்தை அபிவிருத்தி செய்து வருவதாக அங்கு தெரிவிக்கப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா