(ஹனீபா)
சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் இப்தார் நோன்பு திறக்கும்; நிகழ்வு இன்று (06) சம்மாந்துறைப் பிரதேச செயலக வளாகத்தில் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், உதவி தவிசாளர் கலீலுர்றஹ்மான், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், இரானுவ உயரதிகாரிகள்,மற்றும் பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார் உட்பட பல திணைக்களங்களினதும் உயர் அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தின் போது மௌலவி யூ.எல்.எம்.அமீன் அவர்களினால் நோன்பின் மாண்புகள் தொடர்பான பாயான் நிகழ்த்தப்பட்டன.










0 comments:
Post a Comment