இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/29/2013

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு நவீன மாடிக்கட்டிடம்

(ஹனீபா)
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் 110 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட புதிய நவீன மாநகர சபை வளாகத் திறப்பு விழா இன்று (29) மாலை மாநகர முதல்வர் ஏ.அஹமட் ஸகீ தலைமையில் கலாசார பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

இப்பிரமாண்டமான நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்எம்.அதாஉல்லா கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க,  மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,  அக்கரைப்பற்று மநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி உட்பட திணைக்களத் தலைவர்கள்,மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா நிணைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்தார் அத்துடன் அஸ்ஷேய்க் அஸ்ஸெய்யித் மக்கத்தார் ஏ மஜீத் அவர்களினால் நவீன மாநகர கட்டிடத் தொகுதியின் நாடாவை வெட்டித் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகாலவரைக்கும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தனியான நிரந்தரக் கட்டிடம் இல்லாத நிலையில் மத்திய பொது நூலகக் கட்டிடத்திலேயே இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா