நாட்டின் பல்வேறு பாகங்களிலும் துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, மூதூர்,காத்தான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாவனல்லை உள்ளிட்ட மத்திய மாகாண பிரதேசங்களிலும் பிறை தென்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதாக பிறைக் குழு உறுப்பினர் ஒருவர் விடிவௌ்ளியிடம் குறிப்பிட்டார்.
இதற்கமைய ஒக்டோபர் 15 ஆம் திகதி அரபாவுடைய சுன்னத்தான நோன்பை நோற்குமாறும் மறுநாள் 16 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடுத்துவரும் தினங்களில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது பௌர்ணமி தினமாகிய ஒக்டோபர் 18 ஆம் திகதி உயிரினங்களை அறுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment