தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவிகள் உட்பட 53 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான இந்த மாணவர்கள் இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் ஏ.எம். நஸீல் உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் நான்கு பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை விஞ்ஞான பீடத்தில் நேற்று ஏற்பட்ட மோதலில் 23 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment