பாடசாலை மாணவியொருவர் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டமை தொடர்பாக படல்கும்புரை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய இளைஞர் அப்பகுதியிலிருந்து தலைமைவாகியிருப்பதாகவும் விரைவில் அவ்விளைஞனை கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.
படல்கும்புரைப் பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது நிரம்பிய மாணவியே பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டவராவார்.
குறிப்பிட்ட மாணவி படல்கும்புரை அரசினர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment