நிந்தவூரில் இன்றும் (19) முறுகல் நிலை நீடித்தது இதனை தொடர்ந்து பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகத்தினை மேற்கொண்டதுடன் கனரக வாகனத்தினை பயன்படுத்தி வீதித்தடைகளை அகற்றப் பட்டன .
நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதாரண நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நிந்தவூர் பெரிய மஸ்ஜித். பாராளுமன்றஉறுப்பினர் பைசால் காசிம் , நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் பொலிஸாருடன் நடாத்திய கலந்துரையாடலின் பின்னர், குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸாரினால் உறுதிமொழி வழங்கப்பட்டது .
இதனை தொடர்ந்து நேற்று மாலை மஸ்ஜிதுக்களின் மூலம் பிரதேச மக்கள் அமைதி காக்குமாறும், ஹர்த்தலை கைவடுமாறும் கேட்டுக் கொள்ளப்ப்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வீதி மறைப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்று கருதப்படுகின்ற 21 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட டிஐஜி தலைமையிலான சுமார் 500 க்கும் மேற்பட்ட பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment