-எம்.வை.அமீர்-
இன்று காலை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. பிரயோக விஞ்ஞான பீடத்தின் மாணவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் இரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. பிரயோக விஞ்ஞான பீடத்தின் மாணவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் இரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட உதவிப்பதிவாளர் பீ.எம்.முபீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரயோக விஞ்ஞான பீட கணிதபிரிவுத்துறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் மற்றும் சிரேஷ்ட மாணவர் வழிகாட்டி ஆலோசகர் கலாநிதி கே.கோமதி போன்றோரும் கலந்து கொண்டனர்.
இரத்ததானம் செய்வதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்திய குழுவினர் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறினார். இதன் பயனாக மாணவர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்தனர். அதிகமான பெண் மாணவிகள் இரத்த தானம் செய்ததது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment