(எம்.ரீ.எம்.பர்ஹான்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கிவைக்கப்படன.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு கடந்த 2014-04-09 ம் திகதி வழங்கிவைக்கப்பட்ட நிரந்தர நியமனங்கள் பெரும்பாலும் வெளி மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதனால். இவற்றை அம்பாறை மாவட்டத்திற்குள் அல்லது குறைந்த பட்சம் கிழக்கு மாகாணத்திற்குள் மாற்றி வழங்குமாறு ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம். நௌசாட் அவர்கள் ஜனாதிபதியிடத்தில் தனது கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள்.
மேற்படி நியமனங்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்மையினால் பட்டதாரிப் பயிலுனர்கள் சிரமங்களளை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment