(எம்.ரீ.எம்.பர்ஹான்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் சென்னல்கிராமம் இரண்டுக்குரிய மீள் எழுச்சி உட்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் பெயரில் ஹம்ரா பாடசாலையின்முன் வடிகான் அமைக்கும் வேலைத்திட்டம் இன்று சம்மாந்துறை பிரதேசசபை தவிசாளர் அல்ஹாஜ் A.M.M.நெளஷாத் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேசசபையின் செயலாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், இக்கிராமத்திற்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment