எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர்-
இன்று (2014-04-24 ) அதிகாலை 3.30 மணியளவில் மன்னாரில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு கல்முனை வழியாக காரைதீவை நோக்கி வந்த வடி ரக வாகனம் சாய்ந்தமருது பிரதானவீதி அஸ்லம் பிக் மார்ட் அருகில் இருந்த மின்சாரக்கம்பத்தில் மோதுண்டதில் வாகனத்துக்கும் மின்கம்பத்துக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாகனத்தை செலுத்திவந்த சாரதி தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ள அதேவேளை மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் சேதமாகியுள்ளதால் சாய்ந்தமருதுக்கான மின்னிணைப்பு அதிகாலை 3.30 முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment