இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/17/2014

அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் வீதிகள் வெறிச்சோட்டம் பாடசாலைகள் அலுவலகங்கள் பூட்டு

-எம்.வை.அமீர்-
கடந்த சனிக்கிழமை முதல் அளுத்கம, பேருவளை, தர்ஹாநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் பேரினவாதிகளானா பொதுபலசேனா அமைப்பினரால் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட  தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை என்பன துக்க தினம் மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

மாவட்டமெங்கும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. காலையில் சேவையில் ஈடுபட முற்பட்ட வாகனங்கள் சாய்ந்தமருது எல்லையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டன.


இன்று லுகர் தொழுகையின் பின்னர் விசேட துஆ பிரார்த்தனைகளுக்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா