இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/22/2012

நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்: வெளியிட்ட பத்திரிக்கை மீது பாரீஸ் நீதிமன்றத்தில் வழக்கு!


ஃபிரன்ச் பத்திரிக்கையின் ஆசிரியன்
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து உலகமும் முழுவதும் எதிர்ப்புகள் போராட்டங்கள் மூலம் வெடித்து கொண்டிருக்கையில் முஸ்லிம்களை மேலும் கொதிப்படைச் செய்யும் விதமாக எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் வகையில் பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கை நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை கடந்த புதன் கிழமை தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது.


இதற்கான போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பத்திரிக்கையின் மீது கிரிமினல் வழக்கு பாரிஸ் நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த பத்திரிக்கையின் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டு பிரதமர் Jean-Marc Ayrault கூறுகையில் , நாட்டின் கருத்துரிமை சட்டம் இது போன்ற கார்ட்டூன்களை அனுமதிக்கின்றது, இது யாருக்கேனும் பாதிப்பை ஏற்படுத்தினால் அவர்கள் இந்த பத்திரிக்கையின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.

பேசுவதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட நாட்டில் நாம் இருக்கின்றோம் , எப்படி கார்ட்டூனுக்கு அனுமதி இருக்கின்றதோ அதே போன்று அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டம் உள்ளது. இது சட்டத்தை மதிக்கும் நாடு. அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடரலாம். 
எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளில் அதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்டது ஃபிரான்ஸ் நாடாகும்.

ஃபிரான்ஸ் நாட்டு பிரதமரின் பேச்சு கார்ட்டூனை ஊக்குவிக்கும் விதமாகவே உள்ளது. இந்த கார்ட்டூன் வெளியிட்ட பத்திரிக்கைக்கு பிரான்ஸ் நாட்டு அரசு கடும் பாதுகாப்பு அளித்து வருகின்றது. மேலும் பத்திரிக்கை அலுவலகத்தை நோக்கி சென்ற சிலரை ஃபிரான்ஸ் நாட்டு போலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா