பெண் பொலிஸ் அதிகாரியை ஓடும் பஸ்ஸில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற இராணுவ வீரரொருவரை இம் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் ருவன்திகா மாரப்பன உத்தரவிட்டார்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியொருத்தியை வைத்திய பரிசோதனைக்கு அநுராதபுரத்துக்கு அழைத்து வந்துவிட்டு கஹட்ட கஸ்திலிய பொலிஸ் நிலையத்துக்கு சீருடையுடன் திரும்பிக் கொண்டிருந்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மீது மது போதையிலிருந்த இராணுவ வீரரொருவர் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்றுள்ளார் ௭ன கஹட்டகஸ்திலிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment