இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/17/2012

இரு வருட காலமாக நாய்க்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்


கடந்த இரு வருட காலமாக நாயொன்றுக்கு பெண்ணொருவர் தாய்ப்பால் ஊட்டி வரும் விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ரெறி கிரஹாம் (44 வயது) ௭ன்ற இரு பிள்ளைகளின் தாயாரான மேற்படி பெண், தனது 9 வயது மகளால் வளர்க்கப்படும் ஸ்பைடர் ௭ன்ற நாய்க்கு கடந்த இரு வருடங்களாக தாய்ப்பாலூட்டி வருகிறார்.
இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
அவரது மார்பில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு காரணமாக அவருக்கு அவரது பிள்ளைக்கு தாய்ப்பாலூட்ட முடியாது போயுள்ளது.
இந்நிலையில் ஸ்பைடர் ௭ன்ற மேற்படி நாய்க்கு தாய்ப்பாலுட்டுகையில் தான் நிறைவான தாயொருவராக உணர்வதாக அவர் கூறினார்.
2010 ஆம் ஆண்டில் தனக்கு புதிதாக பிறந்த மகனுக்கு தாய்ப்பாலை நேரடியாக ஊட்ட முடியாததால் அதனைப் புட்டிப்பால் போத்தலில் அடைத்து ஊட்டிய வேளை அப்பால் போத்தலின் வாய்ப்பகுதியை ஸ்பைடர் நக்கியதாகவும், அதைத் தொடர்ந்து அது தாய்ப்பால் குடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்ததாகவும் ரெறி கிரஹரம் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா