அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் டொங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் துண்டுபிரசு விநியோகமும் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வெஸ்லி உயர் கல்லூரி மற்றும் கல்முனை ஸாஹீறா கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார சேவை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment