இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/03/2013

போதையில் 12 வயது மகளை வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த கணவரை கொன்ற மனைவி


மதுபோதையில் சென்று தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் ஒன்று தனமல்வில குடாஓயா சமகிபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.


இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,



தந்தை அதிகாலை 3 மணியளவில் அதிக மதுபோதையில் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன் போது வீட்டில் இருந்த 12 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். இதனால் மகள் கூச்சலிட, இதனை அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தாய் மகளை காப்பாற்றுவதற்காக கணவரை கத்தியால் வெட்டியுள்ளார்.



இதனையடுத்து மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா