இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/03/2013

குளத்தில் நீராடிய மாணவன் பலி

வவுனியாவிலுள்ள குளமொன்றில் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த மாணவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 


வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்த வவுனியா தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி கற்கும் இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய பிரபாகரன் சஜீபன் (வயது16) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 



இவர் தனது வீட்டுக்கு அண்மையிலுள்ள வவுனியா கரையானகுளத்தில் நேற்று புதன்கிழமை இரவு தனது  நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 



வவுனியா மாவட்ட பதில் நீதவான் அன்ரன் புனிதநாயகம் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன்,  சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா