இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/03/2013

வயலில் பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்டுபடுத்த முயற்சித்த குழுவினர்

திருக்கோவில் - வட்டமடு வயல் பிரதேசத்தில் வயல் வேலைக்குச் சென்ற மூன்று பெண்களை ஒழு குழுவினர் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளனர். இதிலிருந்து மூவரும் காயங்களுடன் தப்பியோடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.


ஆலையடி வேம்பு மகா சக்தி புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான மூன்று பெண்கள் வழமைப்போல சம்பவ தினமான நேற்றுமுன்தினம் காலையில் வட்டமடு வயல் பிரதேசத்தில் வயலில் களை பிடுங்கிக்கொண்டிருந்தவேளை நான்கு பேர் கொண்ட குழுவினர் மூன்று பெண்களையும் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளனர்.



இதனையடுத்து பெண்கள் கத்தி கூச்சலிட்டதையடுத்து வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கையில் இருவர் உடன்வந்த போது அவர்களை தாக்கிய நிலையில் அந்த குழுவினர் தப்பியோடியுள்ளனர்.



இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்திருந்த மூன்று பெண்களும் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



குறித்த குழுவினர் மது போதையில் வந்து தம்மை தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டதாக இந்தப் பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா