இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/26/2013

பரீட்சை வினாத்தாள்களை 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் அச்சிட தீர்மானம்

TM :பரீட்சை வினாத்தாள் அச்சிடும்போது ஏற்படும் மோசடிகளைத் தவிர்ப்பதற்காக, அவ்வினாத்தாள்களை 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் அச்சிடுவதான புதிய தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் ஜனந்த புஷ்பகுமார தெரிவித்தார். 

பரீட்சை வினாத்தாள் அச்சிடுவதிலிருந்து ஊழியர்களை நீக்குவதற்காகவும் அவற்றை மிகவும் பாதுகாப்பான முறையில் அச்சிடுவதற்காகவும் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார். 

இதன்மூலம், ஒரு நபராலேயே பரீட்சை வினாத்தாள் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் பொதியிடல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த வேலைத்திட்டத்துக்குத் தேவையான இயந்திரங்களை விரைவில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா