இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/06/2013

யுவதிகளை நிர்வாண படங்கள் பிடித்து சித்திரவதை!


இளம் யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு விடுவார் என்று சொல்லி மிரட்டி வந்த நபர் ஒருவர் இவ்வார ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவர் ஒரு பொறியியலாளர் என்றும் பல டசின் கணக்கான பெண்களை இவ்விதம் மிரட்டி செக்ஸிற்கு வற்புறுத்தி வந்திருக்கின்றார் என்றும் பொலிஸார் கண்டு பிடித்து உள்ளார்கள்.
இவருக்கு வயது 36. கிரிபத்கொடவில் வைத்து பிடிக்கப்பட்டு இருக்கின்றார். இவரை சில காலத்துக்கு முன் மனைவி பிரிந்து சென்று உள்ளார். இவர் இங்கு தனிமையில் வசித்து வந்திருக்கின்றார்.
இவரது இருப்பிடத்தை சோதனை செய்த பொலிஸார் பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை இவரது உடைமையில் இருந்து கைப்பற்றினர்.
இவரால் வசப்படுத்தப்பட்டு பல யுவதிகள் இவரது வீட்டில் சில காலம் தங்கி இருந்து உள்ளனர். இவர்களைத்தான் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் புகைப்படங்கள் பிடித்து இருக்கின்றார்.
குறிப்பாக குளியலறையில் இரகசிய கமரா பொருத்தி பல புகைப்படங்களை எடுத்து இருக்கின்றார்.
26 இரகசிய கமராக்களை இவர் வீட்டின் பல இடங்களிலும் பொருத்தி இருந்திருக்கின்றார்.
இந்நபரின் அயலவரான அழகுக் கலை நிபுணர் ஒருவர் மூலமாகத் பொலிஸாருக்கு விபரம் தெரிய வந்தது.
அழகுக் கலை நிபுணர் மூன்று நாட்கள் இந்நபரின் வீட்டில் கோவில் காரியம் ஒன்றுக்காக தங்க நேர்ந்தது.
ஆனால் வழமை போலவே இரகசிய படங்கள் பிடித்துக் கொண்ட நபர் அழகுக் கலை நிபுணரை மிரட்டி இருக்கின்றார்.
பேஸ் புக்கில் நிர்வாண புகைப்படங்களை பிரசுரித்து விடுவார் என்று மிரட்டி பணம் கேட்டு இருக்கின்றார். அத்துடன் செக்ஸிற்கும் வற்புறுத்தி இருக்கின்றார். அழகுக் கலை நிபுணர் இவருடன் நிர்ப்பந்தத்தின் பேரில் செக்ஸ் வைத்துக் கொண்டார்.
ஏழு மாத காலம் இந்நபரின் ஆசைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட அழகுக் கலை நிபுணர் இறுதியில் பொலிஸாருக்கு இவரை காட்டிக் கொடுக்கின்ற தீர்மானத்தை எடுத்தார்.
அழகுக் கலை நிபுணரை பயன்படுத்தி நபரை கையும் மெய்யுமாக பொலிஸார் பிடித்தனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா