இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/06/2013

தெஹியத்தக்கண்டியில் இடம்பெற்ற நடமாடும் சேவை

(ஹனீபா)
கிழக்கு மாகாண மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கண்டறியும் முகமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின்; நடமாடும் சேவை இன்று (06) காலை 9.00 மணியளவில் தெஹியத்த கண்டி சாலிக்கா மண்டபத்தில் ஆரம்பமானது.

தெஹியத்தகண்டி பிரதேச அமைப்பாளர் ஏ.எம். பிரியந்த அபேசேகரவின் வேண்டுதலின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ. சலாஹூதீன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எஸ். ஜஹாங்கீர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் தத்தமது குறைகளையும் வேண்டுதல்களையும் முன்வைத்துள்ளனர் இவற்றில் அதிகமான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அமைச்சரினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா