இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/17/2013

சவூதியில் மகளைக் கொன்ற தந்தைக்கு 4 மாத தண்டணை என்பது உண்மையா ?


SLTJ :சவுதியைச் சேர்ந்த ஒரு மார்க்க அறிஞர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து பின் கொலை செய்ததாகவும் அதற்குறிய தண்டணையாக குறிப்பிட்ட தந்தைக்கு வெரும் 4 மாத சிறை தண்டணை மாத்திரமே சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகவும் வெளிவந்த ஒரு செய்தியை பத்திரிக்கைகள் வெளியிட்டன.
•       உண்மையில் நடந்தது என்ன?
•       பெற்ற பிள்ளையைக் கொன்ற தந்தைக்கு மரண தண்டனை இல்லை என்பது இஸ்லாமியச்சட்டமா?
•       அல்லது சவூதியில் உள்ள சட்டமா?
•       சம்பந்தப்பட்டவர் மதகுரு என்பதால் மரண தண்டனைகொடுக்கப்படாமல் காப்பாற்றப்பட்டாரா?
•       அந்தத் தந்தை தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தாரா?
போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த ஆக்கம் எழுதப்படுகின்றது.
ஏற்கனவே ரிஸானா நபீக் என்ற இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நடை பெற்று ஓரளவு ஓய்ந்திருக்கும் இந்நிலையில் இப்பிரச்சினை பல தரப்பினராலும் பல விதமான விமர்சனக் கண்ணோட்டத்தில் பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
மகளைச் சீரழித்துக் கொன்ற மதகுருவிற்கு மரண தண்டனையிலிருந்து விடுதலை என்ற செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.
நமது நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும்போது பதினான்கு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிடுவார்கள். இது அவர் செய்த குற்றத்திற்கான தண்டனை அல்ல. மாறாக விசாரணைக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக விசாரணைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் ஆரம்பகட்ட தண்டனையாகும். இதன்பின்னர் விசாரணை நடந்து பல ஆண்டுகளுக்குப்பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.
அதுபோல்தான் மகளைக் கொன்ற தந்தை குற்றவாளியா இல்லையா என்பதை விசாரித்து முடிக்கும் வரை நான்கு மாத சிறை தண்டனை அளித்து சவூதி நீதி மன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் தேவை ஏற்பட்டால் விசாரணைக் கைதியான அவரது சிறைவாசம் நீடிக்கப்படும். இது குற்றத்திற்கான தண்டனை அல்ல. குற்றம் சாட்டப்பட்டவரை தடுத்து வைப்பதற்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுதான்.
இம்மாதம் 13ஆம் தேதிதான் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் பலகட்ட விசாரணைக்குப் பின்னர் அவர் குற்றாவளி என்று நிரூபிக்கப்பட்டால்தான் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.
பத்து கொலைகள் செய்த ஒருவனை நீதி மன்றத்தில் நிறுத்தியவுடன்> 14 நாட்கள் காவலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிடும் போது இவனுக்கான தண்டனையே 14 நாட்கள்தான் என்று சிந்திக்கும் யாராவது சொல்வார்களா? இதுபோன்ற ஆரம்ப கட்ட உத்தரவைத்தான் இவர்கள் இறுதி முடிவென்று நினைத்து சவுதியின் சட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து போகிர போக்கில் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் வேலையைப் பார்க்கின்றார்கள்.
நான்கு மாத சிறை தண்டனை என்பதை தவறாகப் புரிந்து கொண்ட சவுதியின் கல்ஃப் நியூஸ் என்ற பத்திரிகை பின்னர் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டது.
இதை அப்படியே வாந்தி எடுத்த சிலர் இன்னமும் வருத்தம் தெரிவிக்காமல் பொய்யை உண்மையாக்கும் கோயபல்ஸ் வேலையில் இறங்கியுள்ளனர்.
அடுத்து மதகுரு என்பதற்காக சலுகை என்பதும் அறியாமையின் வெளிப்பாடாகும். சவூதி நீதி மன்றங்களில் ஒருவர் மதகுருவா? இல்லையா? என்பது கவனத்தில் கொள்ளப்படுவது இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை சரியாகக் கடைப்பிடிக்கும் சில நாடுகளில் சவூதியும் ஒன்றாகும்.
பெரும்பான்மைக்கு ஒரு நீதி> சிறுபான்மைக்கு ஒரு நீதி; என்ற சட்டம் சவுதியில் கிடையாது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.  சவூதியில் மதகுருவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சவூதியின் சட்டப்படிதான் தண்டிக்கப்படுவார்.
சில முஸ்லிம் இணையதளங்கள் அவர் மதகுரு அல்ல என்று நீண்ட விளக்கம் அளித்து கோமாளித்தனம் செய்துள்ளனர். அவர் தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்பவரே தவிர மதகுரு அல்ல என்று விளக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
ஒருவன் குற்றவாளியா? இல்லையா? என்ற பிரச்சனை பற்றி பேசும்போது கூட மதகுருக்களைப் பாதுகாக்கும் வகையில் முட்டுக் கொடுப்பது ஈனச்செயலாகும். அவர் மதகுருவாக இருந்தாலும்> இல்லாவிட்டாலும் அவருக்காக சட்டம் வளைந்ததா என்பதுதான் முக்கியம். சட்டம் வளையவில்லை எனும்போது அவர் மதகுருவா? அல்லவா? என்ற சர்ச்சை தேவையற்றது.
அதே போல் குறிப்பிட்ட நபர் தனது மகளை பாலியல் பாலாத்காரம் செய்தார் என்பது வடிகட்டிய கற்பனையாகும். இப்படி செய்தி பரப்புபவர்கள் தங்கள் கருத்தில் நியாயமானவர்களாக இருந்தால் அதற்குறிய ஆதாரத்தை வெளியிட வேண்டும்.
மருத்துவப் பரிசோதனையில் இவ்வாறு சொல்லப்பட்டதா? அல்லது வழக்குத் தொடர்ந்த தாய் இவ்வாறு புகார் தெரிவித்து இருந்தாரா? என்பதை வைத்தே இவ்வாறு கூற இயலும்.
குழந்தையின் தாய் தனது கணவருக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருக்கிறார். கொலை செய்ததற்குத்தான் இந்த தண்டனையை கோரி இருக்கிறார். கற்பழிப்பு பற்றி கூறவில்லை.
மேலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பாலியல் பலாத்காரம் பற்றி சிலர் பரப்பிய செய்திகளை குறிப்பிட்ட தாய் கண்டித்தும் இருக்கிறார் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அந்தக்குழ்ந்தையின் மருத்துவ ஆய்விலும் கற்பழித்ததற்கான சான்றுகள் இல்லாத நிலையில் இவர்கள் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பின் காரணமாகவே இட்டுக்கட்டி அவதூறு பரப்புகின்றனர்.
பெற்ற பிள்ளையைக் கொன்ற தந்தைக்கு மரணதண்டனை கிடையாது என்ற சட்டம் சவுதியிலும் ஷரீஅத்திலும் இருப்பதாகவும் அது காட்டுமிராண்டித் தனமானது என்று ஒரு கூட்டம் விமர்சிக்கும் அதே வேலை. சவுதியினதும் ஷரீஅத்தினதும் சட்டம் தெரியாத, மார்க்க அறிஞர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் சில இஸ்லாமியர்களும் பெற்ற பிள்ளையை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை கிடையாது என்று நினைத்துக் கொண்டு அதைக் காப்பாற்றுவதற்கு பல விதமான வலிந்துறைகளை செய்கின்றார்கள்.
உண்மையில் ஷரீஅத் சட்டம் இது விடயமாக சொல்வது என்னவென்பதை இப்போது பார்ப்போம்.
பிள்ளையை தந்தை கொன்றாலும் அவருக்கும் மரண தண்டனை என்பதே சவூதியின் சட்டமாகும். ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளில் மரணதண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
அரப் நியூஸ் என்ற பத்திரிகையின் கீழ்க்கண்ட செய்தியை பாருங்கள்.
சவூதியின் வடமேற்கு பகுதியான தபூக் பகுதியைச் சேர்ந்த முஸ்லெஹ் பின் ஸலீம் அல் அதாவி என்ற சவூதி நாட்டுக்காரர் தனது 5 வயது மகளை கொன்றதற்காகஇ நவம்பர் 2010 -இல் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பார்க்க : இந்த செய்திக்கான ஸ்கிரீன் ஷாட்
arabnews
இவர்கள் சொல்வதுபோல் மகளைக் கொன்ற தந்தைக்கு மரணதண்டனை இல்லை என்று சவூதியில் சட்டமே இல்லை என்னும் போது இல்லாத சட்டம் குறித்து வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்.
நடந்த உண்மைகளை நாம் எழுதும்போது நம்மை சவூதியின் ஏஜெண்டுகள் என்று இவர்கள் எழுதி தங்களை சொரிந்து கொள்கின்றனர்.
நாம் சவூதியின் பல நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்த்து வருகிறோம். சவூதியில் இருந்தோ அல்லது எந்த ஒரு வெளிநாட்டிடம் இருந்தோ எந்தவித நிதி ஆதாரங்களையும் பெறுவது இல்லை. என்பதை கொள்கை முடிவாக எடுத்து அதை எங்களது அமைப்பின் சட்டவிதிகளிலும் (பைலா) தெளிவாக குறிப்பிட்டுஇ அதன்படி செயல்பட்டு வரும் இயக்கம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்று இந்நேரத்தில் இங்கு பதிவு செய்கிறோம்.
அடுத்து இஸ்லாம் இது குறித்து என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்.
பிள்ளையை தந்தை கொன்றால்இமனைவியை கணவன் கொன்றால் அண்ணனை தம்பி கொன்றால்இ மரண தண்டனையில்லை என்று இஸ்லாம் சொல்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.
மரண தண்டனை பற்றிய விதிகளை குர்ஆன் பல்வேறு இடங்களில் சொல்லிக்காட்டுகிறது.
முதல் மனிதரான ஆதமின் இரு புதல்வர்களில் ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டார். அதாவது ஒருவர்தனது உடன் பிறந்த சகோதரரைக் கொன்றுவிட்டார் என்பதை திருக்குர் ஆன் 05 : 27 முதல் 30 வரை உள்ளவசனங்கள் சொல்லிக்காட்டுகின்றன.
இந்த அத்தியாயத்தின் 32 ஆம் வசனத்தில் இஸ்ரவேல் சமுதாயத்தினருக்கு கொலை குறித்த கடும் எச்சரிக்கை விடப்பட்டதாக கூறிக்காட்டப்படுகின்றது. இஸ்ரவேல் சமுதாயத்திற்கு கொலைக்கு கொலை அதாவது உயிருக்கு உயிர் என்ற சட்டம் வழங்கப்பட்டதாக இதே அத்தியாயத்தின் 45வது வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் :
உயிருக்கு உயிர்இ கண்ணுக்குக் கண்இ மூக்குக்கு மூக்குஇ காதுக்குக் காதுஇ பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். (அல்குர் ஆன் 5 : 45)
மேற்கண்ட வசனம் கொலை குறித்த கீழ்க்கண்ட வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது.
தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே இழப்பை அடைந்தவனாக ஆகி விட்டான்.
தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே” எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான். “கொலைக்குப் பதிலாகவோஇ பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர்இ மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ என்றும்இ “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர். (அல்குர்-ஆன் 5 : 30 – 32)
இவ்வசனங்கள் கூறுவது என்ன?
கூடப்பிறந்த சகோதரனைக் கொன்றாலும் அது கொடிய குற்றம்தான். மனித குலத்தையே கொன்ற குற்றமாக அது கருதப்படும் என்று இஸ்லாம் கூறுகிறது. கூடப்பிறந்த சகோதரானக இருப்பது மரணதண்டனையில் இருந்துகாப்பாற்றாது என்பதும்இ உறவுகளுக்குள் நடக்கும் கொலையும் கொலைதான் என்றும் இந்த வசனங்கள் தெள்ளத் தெளிவாக கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட காலத்தில் பெற்றவர்கள் தமது பெண் குழந்தைகளைக் கொன்று புதைத்து வந்தனர். அதைக் கண்டித்து திருத்துவதும் நபிகள் நாயகத்தின் முக்கிய பணியாக இருந்தது. பின் வரும் வசனங்களைப் பாருங்கள் :
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டிஇ அவர்களை அழித்துஇ அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக! (அல்குர் ஆன் : 06 – 137)
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும்இ அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டிஇ அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (அல்குர் ஆன் : 06 – 140இ)
என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது. (அல்குர் ஆன் : 81 – 08இ 09)
பெற்ற பிள்ளையைக் கொன்ற கயவர்களைத் திருத்த வந்த இஸ்லாம் அதை ஊக்குவிக்கும் வகையில் பிள்ளையைக் கொல்ல எப்படித் தூண்டும்?
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அதுஇ “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந் தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும்இ அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப் படையானதையும்இ இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர் ஆன் : 06 – 151)
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்துஇகவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான்.
அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர் ஆன் : 16 – 58> 59)
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும்இ உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (அல்குர் ஆன் : 17- 31)
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்”என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர் ஆன் : 60 –12)
குழந்தையைக் கொல்வது கொடிய குற்றம் எனக்கூறும் இஸ்லாத்தில்> தந்தையானவர் மகளைக் கொன்றால் மரண தண்டைனை கிடையாது என்ற சட்டம் இருக்க இயலுமா?
பொதுவாக ஒரு உயிரைக் கொல்வது இஸ்லாத்தில் எவ்வாறு கடுமையாகப் பார்க்கப்படுகிறது என்பதையும் கீழ்க்காணும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். (அல்குர் ஆன் : 04 – 93)
கொலைக்குற்றங்கள் அதிகரிக்கக்கூடாது என்பதுதான் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின் நோக்கம் என்பதைபின்வரும் 02- 178> 179 ஆகிய வசனங்கள் தெளிவுடன் கூறுகின்றன.
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன்> அடிமைக்காக (கொலை செய்த) அடிமை> பெண்ணுக்காக (கொலை செய்த) பெண்> என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும்> அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள். (அல்குர் ஆன் : 02- 178>179)
தந்தை மகளை கொலை செய்தால் அவரை பழிக்குப் பழி வாங்கக்கூடாது என்று ஆதாரமில்லாத சிலஹதீஸ்கள் உள்ளன. அந்த செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமற்றவர்கள் என்பதாலும் குர்ஆனுக்கு இவை மாற்றமாக இருப்பதாலும் அவற்றின் அடிப்படையில் மிகப்பெரிய இந்தப் பிரச்சினையில் தீர்ப்பளிக்க முடியாது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா