இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/17/2013

சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த 50, 60, 70 வயது காமுகர்கள்


கோவையில், 13 வயது பள்ளிச் சிறுமியை, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்த, 50, 60, 70 வயது காமுகர்கள் நான்கு பேரும், வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு, இரு பெண் குழந்தைகள். இவரது மூத்த மகளுக்கு, 13 வயது; 9ம் வகுப்பு படிக்கிறாள். இச்சிறுமியின் தாய், சில ஆண்டுகளுக்குமுன், குடும்பத்திலிருந்து பிரிந்து சென்று விட்டார். இரு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் தவித்த தந்தை, ராமநாதபுரத்திலுள்ள உறவினர் ஈஸ்வரியின் வீட்டில், அவரது வளர்ப்பில் விட்டிருந்தார்.

கடந்தாண்டில் ஒரு நாள், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், ஈஸ்வரியின் கணவர் கோபாலகிருஷ்ணன், 60, சிறுமியை, அருகிலுள்ள ஓய்வு பெற்ற, அரசு மருத்துவமனை, "கம்பவுண்டர்' பாலு, 70, என்பவரது வீட்டிற்கு, "சிகிச்சைக்காக' அழைத்து சென்றுள்ளார்.


விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் : "ஊசி போட்டால் வலி குறையும்' என்று கூறிய பாலு, சிறுமிக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். மயக்க நிலைக்கு சென்றதும், கோபாலகிருஷ்ணனும், பாலுவும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது, நடந்ததை அறிந்து கதறி அழுதுள்ளார். "சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம்' என்று, மிரட்டியுள்ளனர். பயந்துபோன சிறுமி, வெளியில் சொல்லவில்லை. கோபாலகிருஷ்ணன், சில நாட்கள் கழித்து, பொள்ளாச்சியில் உள்ள உறவினர் கருப்புசாமி, 50, என்பவரின் தோட்டத்து வீட்டிற்கு, சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு, கோபாலகிருஷ்ணனும், கருப்புசாமியும் சேர்ந்து, சிறுமியை நாசப்படுத்தி உள்ளனர். தோட்டத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளனர்.


மரண வேதனையில் சிறுமி
கோவைக்கு திரும்பி வந்தபின், ஒலம்பஸ் பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்திருக்கும், "ராகம்' கருப்புசாமி, 50, என்பவரின், சுந்தராபுரம் வீட்டிற்கு, சமையல் காஸ் சிலிண்டர் எடுப்பதாக கூறி, சிறுமியை கோபாலகிருஷ்ணன் அழைத்து சென்றுள்ளார். அங்கு "ராகம்' கருப்புசாமியும், அவரும் சேர்ந்து, சிறுமியை நாசம் செய்தனர். இவ்வாறாக, கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்புசாமி, ராகம் கருப்புசாமி நான்கு பேரும், கடந்த ஓராண்டாக சிறுமியை பலமுறை நாசப்படுத்தியுள்ளனர். மரண வேதனையில் இருந்த சிறுமி, ஒருநாள் பஸ்சில் சென்றபோது, தனம் கார்த்திக் 19, என்ற வாலிபர், ஆறுதலாக பேசியுள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, காதலானது. "வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம்' என்று சிறுமியிடம், தனம் கார்த்திக் கூறியுள்ளான். அவனுடன் சென்று விட்டால், "காமக்கொடூரர்'களின் பிடியில் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்து, சம்மதித்துள்ளாள்.

கடந்த வாரம், இருவரும் சத்தியமங்கலம் சென்று லாட்ஜில் தங்கியுள்ளனர். தனிமையில் தங்கியிருந்தபோது, தனம் கார்த்திக்கும் அவளை விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், "பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை' என்று, கோவை, ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறுமி, ஈரோட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், உறவினர்கள் அங்கு சென்று மீட்டனர். அவர்களின் துன்புறுத்தல், மீண்டும் தொடர்ந்ததால், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறுமி புகார் அளித்தார்.

ராமநாதபுரம் போலீசார் விசாரித்து, சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில், உறவினர் கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்புசாமி, ராகம் கருப்புசாமி, தனம் கார்த்திக் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கு, கோவை மாநகர கிழக்கு பெண் போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடக்கிறது. இன்ஸ்பெக்டர் முனீராபேகம் கூறுகையில், ""கடந்த ஓராண்டாக சிறுமியை ஒவ்வொரு இடத்திற்கும், ஏதாவது காரணம் சொல்லி அழைத்து சென்று சீரழித்துள்ளனர். கற்பழிப்பு, கூட்டு சேர்ந்து கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு பிரிவில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டியுள்ளதால், குற்றவாளிகளின் முக அடையாளத்தை, வெளியிட இயலாது,'' என்றார்.கோவை போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சுந்தரமூர்த்தி கூறுகையில், ""பலர் சேர்ந்து சிறுமியை கற்பழித்தாக புகார் வந்தது. துரித விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. சட்டம் - ஒழுங்கு துணை கமஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது,'' என்றார்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா