இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/10/2013

மாவடிப்பள்ளி அறுவக்கொட்டன் பாலத்தடியில் விபத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

(ஹனீபா)
சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை கல்முனை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி அறுவக்கொட்டன் பாலத்தடியில் நேற்று (09) இரவு 8.00 மணியளவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை மலையடிக்கிராமம்-01ம் பிரிவைச் சேர்ந்த முகம்மதலியார் அப்துல் சலாம் (கபீர்) வயது – 42 என்ற குடும்பஸ்தர்; ஸ்தலத்திலேயே உயிரிழந்தள்ளார்.

இவர் காரைதீவுப் பிரதேசத்திலிருந்த சம்மாந்துறை நோக்கி வந்து கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிய போது ஏற்பட்ட பலத்த காயங்களினாலேயே இம் மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மெற்கொண்டு வரகின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா