இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/09/2013

இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால்? ஈரானிய மக்கள் இஸ்ரேலை இல்லாமல் செய்து விடுவர்

TB: எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானிய மக்கள் இஸ்ரேல் என்ற நாட்டையே இல்லாமல் செய்து விடுவர் என்று அந்நாட்டு அதிபர் மஹமூத் அகமதிநிஜேத் எச்சரிக்கை விடுத்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டுக்காக சென்ற மஹமூத் அகமதிநிஜேத் அந்நாட்டு செய்தி ஊடகங்களின் ஆசிரியர்களிடையே பேசுகையில், ஜியோனிஸ்டுகளின் நாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்த உக்கிரம் காட்டி வருகிறது. ஆனால் ஈ்ரானின் பதில் தாக்குதல்களை எண்ணி இஸ்ரேல் அச்சப்படுகிறது. இஸ்ரேலின் எத்தகைய ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள எங்கள் நாட்டுப் படைகள் தயாராக இருக்கின்றன. எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் என்ற நாட்டையே இல்லாமல் செய்து விடுவோம் என்றார். அண்மையில் இஸ்ரேல் அரசு, ஈரான் உலக நாடுகளின் அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் நாட்டுக்கு ஆபத்தாக இருக்கிறது என்று எச்சரித்திருந்த நிலையில் ஈ்ரான் அதிபர் இத்தகைய பதிலடி கொடுத்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா