-ஹனீபா-
அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்; சங்கத்தின் 15வது தேசிய மகாநாடு நாளை (26) காலை 9.00 மணிக்கு அலரி மாளிகையில் சங்கத்தின் பிரதான செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஏ.டீ.ஜகத்குமார தலைமையில் நடைபெறவுள்ளது இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்; சங்கத்தின் 15வது தேசிய மகாநாடு நாளை (26) காலை 9.00 மணிக்கு அலரி மாளிகையில் சங்கத்தின் பிரதான செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஏ.டீ.ஜகத்குமார தலைமையில் நடைபெறவுள்ளது இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
அதிதிகளான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ;மன்யாபா அபேவர்தன, பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சுசந்த புஞ்சிநிலமே, எஸ்.எம்.சந்திரசேன, இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி பந்துலதிலகசிறி உட்பட அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இந்த தேசிய மகாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.







0 comments:
Post a Comment