(ஹனீபா)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் திகதி காலை 10.00 மணிக்கு சம்மாந்துறைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் திகதி காலை 10.00 மணிக்கு சம்மாந்துறைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு முன்னெடுப்பு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சம்மாந்துறை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன 'ஈ' கல்வி மையக்கட்டிடத்தை திறந்து வைப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு வருகைதரவுள்ளார்.
ஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும்,சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம் நௌஷhட் அவர்களின் அழைப்பை ஏற்று தொலைத் தொடர்புகள் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டியவின் பங்குபற்றலுடனும்; அம்பாறை மாவட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்களதும் பங்குபற்றலுடன் நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த 'ஈ' கல்வி மையக் கட்டிடத்துக்கான அடிக்கல்காட்டும் நிகழ்வு கடந்த 2012.07.15ம் திகதி இளைஞருக்கான நாளைய அமைப்பின் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் நடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதியின் இவ்வருகையையிட்டு விNஷடமாக சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதி காபட் இடப்பட்டு துரிதமாக அபிவிருத்தி செயயப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment